வளர்ந்தாலும் உணவை
வாயில் ஊட்டிவிடும்
அம்மாவையும்
வரும்வரை வாசலிலேயே
தூங்காமல் காத்திருக்கும்
அப்பாவையும்
வாஞ்சøயாய்த் தலைகோதி
முத்தமிட்டு நெட்டி முறிக்கும்
பாட்டியையும்
டி.வி. ரிமோட்டுக்கு தினமும்
சண்டையிடும் அருமைத்
தம்பியையும்
ஊர்வம்பு பேசியபடியே
வீட்டைக் கூட்டிப் பெருக்கும்
கண்ணம்மாவையும்
“உன் கையாலே போணி பண்ணு’ என
உரிமையுடன் கேட்கும்
பூக்காரம்மாவையும்
மனம் தேடித் தவிக்கிறது…
அமெரிக்க தேசத்தின்
அந்நிய முகங்களிடையே….
- ஜி. ராஜி, சென்னை in Mangaiyar Malar
natarajan
